மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறைமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை தாண்டியடி கல்வாரித்திருத்தலத்தில் நடைபெற்றது.

திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொய்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானமும் தொடர்ந்து மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 500ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin