மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குத்தரிசிப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்மொழி பேசும் கத்தோலிக்க இளையோர் சிங்கள மொழி பேசும் கத்தோலிக்க இளையோரை கொண்ட அம்பாறை புனித இஞ்ஞாசியார் ஆலயத்தை தரிசித்து அங்கு அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி ஆலய இளையோர் ஒன்றியத்தை மீள்உருவாக்கம் செய்துவைத்து தோழமை உறவை வலுப்படுத்தினர்.

கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கள், கலந்துரையாடல்கள், குழுச்செயற்பாடுகள், கள அனுபவ பயணம் என்பன இடம்பெற்றதுடன் 40 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin