மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நியமனம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் ஓய்வுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மறைமாவட்ட துணை ஆயரும் தேசிய கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான ஆயருமான பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் கடமையாற்றவுள்ளார்.

 

By admin