இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு செபமாலை பக்தியை வளர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மறைக்கோட்ட மரியாயின் சேனை அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலைப்பவனி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மறைக்கோட்ட மரியாயின் சேனை இயக்குநர் அருட்தந்தை இன்னஸ் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி பெரிய உப்போடை புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இப்பவனியில் மட்டக்களப்பு மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 2000க்கு அதிகமான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin