மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை சொமஸ்கன் சபை அருட்தந்தை வினோஜன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கல்முனை திருஇருதய நாதர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பேதுரு ஜீவராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.