போர்டோவின் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலில் திருக்குடும்ப பொதுநிலையினர் மற்றும் திருக்குடும்ப அருட்தந்தையர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 8,9,10ஆம் திகதிகளில் மானிப்பாய் கட்டுடை பிரதேசத்தில் நடைபெற்றது.
திருக்குடும்ப மாகாண சபை ஆலோசனைக்குழு அருட்சகோதரி விஜயா அவர்களின் தலைமையில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்பு, மக்களுடனான கலந்துரையாடல் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

