யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய செயற்குழு தெரிவு, பொதுநிலையினர் கழக யாப்பு விளக்கம் என்பனவற்றுடன் கழகத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக புதிய செயற்குழு உறுப்பினர்கள், முந்நாள் தலைவர், செயலாளர்கள், மறைமாவட்ட பக்திசபை உறுப்பினர்களென 40 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin