தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில் மற்றும் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றின் திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வரவேற்பு திருச்சொருபம் பங்குத்தந்தை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்து. இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் பங்குமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

இக்கட்டத்திற்கான நிதியுதவியை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் பங்குமக்கள் வழங்கியிருந்தனர்.

By admin