யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபையால் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன்டி போல் திருவிழாவும் சபையின் 41ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஆன்ம ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் பதிவுசெய்யப்பட்ட பந்திகளுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மத்திய சபை உறுப்பினர்கள், பந்நிகளின் அங்கத்தவர்களென 400 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin