கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் வட்டக்கச்சி பங்கின் இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள “புனித ஆரோக்கியநாதர் அறநெறி பாடசாலைக்கான” அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்கள் கலந்து புதிய அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இக்கட்டடத்திற்கான அனுசரணையை நெதர்லாந்து நாட்டின் ACNS Project hulp நிறுவனம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin