தேசிய மறைக்கல்வி தினத்தை சிறப்பித்து புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி கொடியேற்றப்பட்டு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin