புங்குடுதீவு பங்கிற்குட்பட்ட பத்து வீட்டுத்திட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தத்நை அமீர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலி நிறைவில் கடல் ஆசிர்வாதம் இடம்பெற்றது.

By admin