பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

01ஆம் திகதி சனிக்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டு 4ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபை யாழ் மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

இத்திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியதுடன் அன்று மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் தொடர்ந்து ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin