தவக்கால சிறப்பு நிகழ்வாக பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை தியானம் கடந்த 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாசையூர் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் பங்குமக்கள் அயல் ஆலய மக்களென ஏராளமானவர் கலந்து செபித்தனர்.