பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையும் தொழிற்கல்வி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த புனித டொன் பொஸ்கோ திருவிழா கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தையர்கள் மெல்வின் மற்றும் நதீப் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்னம் அவர்கள் கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் கடந்த வருடம் நடைபெற்ற தொழிற்பயிற்சியை கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin