பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவா போல் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருப பவனியும் ஆசிரும் இடம்பெற்றன.

By admin