யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் கலந்து தியான உரை, செபமாலை, சிலுவைப்பாதை தியானம், குழு செயற்பாடு என்பவற்றின் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.
மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் மற்றும் நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 120 வரையான இளையோரும் பங்குபற்றியிருந்தனர்.