பரந்தன் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தயா செபமாலை அவர்களும்; தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin