தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றன.

மறை வளர்த்து இறையரசை உணர்வோம் என்ற கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரமதானம், கருத்தமர்வு, கள அனுபவ பயணம், சிறப்பு வழிபாடுகள், திருப்பலி, ஒன்றுகூடல் என்பன இடம்பெற்றன.

பரந்தன் புனித அந்தோனியார் மற்றும் முரசுமோட்டை சதாசகாய அன்னை ஆலயங்களின் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

By admin