கூழாமுறிப்பு பங்கின் பண்டாரிகுளம் மடுமாதா ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

By admin