பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு 22ஆம் திகதி கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் வழிநடத்ததலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் காலைத் திருப்பலியும் தொடர்ந்து கள அனுபவ பயணம் மற்றும் ஆலய வளாகத்தை துப்பரவு செய்யும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

கள அனுபவ பயணத்தில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து இளவாலை திருக்குடும்ப கன்னியர்மடத்தில் உள்ள வயது முதிர்ந்த அருட்சகோதரிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினர்.

By admin