பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ தினம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருத்தந்தையின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை குயின்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin