1986ஆம் அண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நினைவுத் திருப்பலியும் தொடர்ந்து நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இறந்தவர்களின் உறவினர்கள், பங்குமக்களென பலரும் கலந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin