சுன்னாகம் பங்கின் நாக்கியபுலம் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குனர் அருட்தந்தை ஜெராட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.