கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது.

நத்தார் தாரகை, அமைதியின் மைந்தன், அன்பின் குடும்பம் ஆகிய தலைப்புக்களில் 10 வயதுக்குட்பட்டவர்கள் 10 – 15 வயதுக்குட்பட்டவர்கள் 15 – 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 21 வயதுக்கும் அதற்கு மேற்பட்டவர்களென 4 பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

யு4 தாளின் கிடைப்பக்கமாக சுற்றி அரை அங்குலம் இடைவெளியுடன் கலர் பென்சில் தவிர்ந்த ஏனைய வர்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து ஓவியத்துடன் விண்ணப்படிவத்தையும் இணைத்து பங்குத்தந்தை மறைக்கல்வி பிரதான ஆசிரியர் சமாதான நீதவான் அரச சேவையில் பதவி நிலை வகிக்கும் உத்தியோகத்தர் யாராவது ஒருவரின் சிபாரிசுடன் வருகின்ற கார்த்திகை மாதம் 08ஆம் திகதிக்கு முன்பாக உறையின் இடதுபக்க மூலையில் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டி 2024 என குறிப்பிட்டு பணிப்பாளர் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் மூன்றாவது தளம் இலக்கம் 180 டி.பி.ஜயா மாவத்தை கொழும்பு 10 என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்கவோ நேரடியாகவோ சமர்ப்பிக்க முடியுமென கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

By admin