தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட தைகொண்டோ குத்துச்சண்டை போட்டி இரத்தினபுரி புதிய நகர உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோண் றஜீவ் பியன்பெனோ 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 63 – 68 கிலோவிற்கு இடைப்பட்ட போட்டியில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கிடையே முதல்தடவையாக நடாத்தப்பட்ட தைகொண்டோ குத்துச்சண்டை போட்டி இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin