இலங்கை தேசிய மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய மறையாசிரியர் பயிற்சி பாசறை 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று றாகமவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

தேசிய மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை பெனட் சாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் றாகம தேவத்தை தியான இல்லத்தில் இடம்பெற்றுவரும் இப்பாசறை நிகழ்வில் செயலமர்வுகள், கருத்துரைகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் வருகின்ற 19ஆம் திகதி திங்கட்கிழமை வரை இது நடைபெறவுள்ளது.

இப்பாசறையில் தமிழ் பேசும் மறைமாவட்டங்களை சேர்ந்த 50 வரையான மறையாசிரியர்களும் மறைக்கல்வி நிலைய இயக்குநர்களும் பங்குபற்றியுள்ளனர்.

By admin