தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் தினமும் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் நிகழ்வும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல நடைபெற்றன.

கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் ‘மாற்றுத்திறனாளிகள் எமது நம்பிக்கை’ என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை கஜீஸ்காந்த், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin