பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட உடற்பயிற்சி போட்டி கடந்த 28, 29ஆம் திகதிகளில் குருநாகல் மாலியதேவா பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

15 ஆண்கள் அணிகளும் 14 பெண்கள் அணிகளும் பங்குபற்றிய இப்போட்டியில் ஆண்கள் அணியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி அணி முதலாம் இடத்தைபெற்று சம்பியன்பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தையும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.

அத்துடன் பெண்களுக்கான போட்டியில் கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தைபெற்று வெண்கலப்பதக்கத்தையும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகா வித்தியாலயம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

By admin