தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கின் ஜோன் மரிய வியான்னி மற்றும் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பமாகி அங்கு நடைபெற்று வருகின்றன.

பங்குதந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள், பாசறை, திரைப்பட காட்சிப்படுத்தல், எழுவைதீவு பங்கு இளையோர்களுடனான சந்திப்பு, களப்பணயம், முதியோருடனான சந்திப்புக்கள் போன்றவை இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் இளையோர்கள் ஆர்வமுடன் பங்குபற்றியதுடன் இவ்வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் நளையதினம் அங்கு நடைபெறவுள்ளன.

By admin