மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை கார்மேல் கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட துணைக்குழும அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி பவித்ரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் சபையின் இலங்கைக்கான மகாணத்தலைவி அருட்சகோதரி நிலாந்தி அவர்கள் கலந்து கார்மேல் அன்னையர்கள் 10 பேருக்கும் கார்மேல் சிறார்கள் 20 பேருக்கும் சின்னங்களை சூட்டிவைத்தார்.

அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளுடன் இணைந்து இறைபணியாற்ற தமது ஜந்து வருட பயிற்சியை நிறைவுசெய்த துணைக்குழும அங்கத்தவர்கள் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளும் அடையாளமாக இச்சின்னங்கள் சூட்டிவைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் மட மாகாண ஆலோசகர் அருட்சகோதரி துசிக்கா மற்றும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

By admin