தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் வருகின்ற மாதம் 13ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய பொதுநிலையினர் தினம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin