திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண புதிய முதல்வராக அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா அவர்கள் கனடா நாட்டின் மொன்றியல் துறுவா ரிவேர்ஸ் இடத்திலுள்ள சபையின் முதல்வர் அருட்தந்தை மார்க் ஆந்திரே அவர்களினால் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டு தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அருட்தந்தை கொட்வின் கமிலஸ் சணா அவர்கள் 2014ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மன்னார் மறைமாவட்டம் வங்காலை பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும், பறப்பாங்கண்டல் பங்கின் பங்குத்தந்தையாகவும், கண்டி திருவுள பணியாளர் பெரிய குருட அதிபராகவும், யாழ்ப்பாணம் திருவுள பணியாளர் சிறிய குருமட அதிபராகவும், பதுளை மறைமாவட்ட மொனராகலை பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும், பதுளை மறைமாவட்ட பேராலய உதவிப்பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

By admin