இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘நம்பிக்கையின் திருப்பயணிகள் ஆவோம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுநிலையினர் கழக அங்கத்தவர்கள், யாழ். புனித மரியன்னை பேராலயம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம், சின்னமடு புனித செபமாலை அன்னை திருத்தலம், மாதகல் புனித லூர்து அன்னை கெபி, பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலம், தும்பளை புனித லூர்த்து அன்னை கெபி, முகமாலை புனித வேளாங்கண்ணி ஆலயம் ஆகிய இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற வழிபாடுகள், நற்கருணை ஆராதனை, திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம் என்பவற்றில் பங்குபற்றினர்.

யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஆசியுரையுடனும் ஆரம்பமாகிய இவ்யாத்திரையில் 120 வரையான பொதுநிலையினர் பங்குபற்றியிருந்தனர்.

By admin