திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்காக வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து தம்பதியினருக்கான கௌரவிப்புக்கள், மகிழ்வூட்டும் நிகழ்வுகளுடன் அவர்களின் இல்லறவாழ்வு அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 75 தம்பதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், அருட்தந்தையர்கள், தம்பதியினரின் பிள்ளைகள், உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin