மன்னார் மறைமாவட்ட உயிலங்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிலங்குளம்; புனித பேதுரு ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சாந்தன் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து பிள்ளைகளுக்கான சின்னம்சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.
மறைமாவட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்து சபை ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் 50 சிறார்கள் நிரந்தர உறுப்பினருக்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர்.