திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், தியான உரைகள், நற்கருணை ஆராதனை என்பவற்றுடன் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிங்ஸ்லி றொபேட் அவர்களின் தலைமையில் திருப்பலியும் இடம்பெற்றது.
இத்தியானத்தில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 150 வரையான இளையோர் பங்குபற்றினர்.