யாழ்ப்பாணம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலிருந்து களுத்துறை தஹம் செஹன திரு இருதய ஆண்டவர் இடைநிலைக் குருத்துவக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin