தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனையின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரசாசம் அவர்கள் கலந்து புதிய பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பங்குமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin