மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

10ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை சொமஸ்கன் சபையின் இலங்கைக்கான மேலாளர் அருட்தந்தை யூட் குயின்ரஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியியை அருட்தந்தை லோறன்ஸ் லோகநாதன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin