செம்பியன்பற்று சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சிறுவர்தின நிகழ்வுகள் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன.

சென். பிலிப்நேரிஸ் முன்பள்ளி முகாமைத்துவ குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தாளையடி – செம்பியன்பற்று பங்குத்தந்தையும் முன்பள்ளி காப்பாளருமான அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்சகோதரி கிறிஸ்ரினா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin