வணக்க மாதத்தினை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி எழுத்தூர் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி புனித செபஸ்தியார் பேராலயத்தை சென்றடைந்து அங்கு நடைபெற்ற நற்கருணை ஆராதனையுடன் நிறைவடைந்தது.

இப்பவனியில் மன்னார் மறைமாவட்ட பங்குகளைச் சேர்ந்த 300ற்கும் அதிகமான இளையோர் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin