ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டு 37 ஆண்டுகள் அதன் வளர்ச்சியில் துணைநின்று பணியாற்றியவர்களை கௌரவிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சூரியவெள்ளி விருது வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை ஜேர்மன் எசன் மாநகரில் நடைபெற்றது.

பணியக இயக்குநர் அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பணியாளர்களுக்கான கௌரவிப்பும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சூரியவெள்ளி விருதுகள் நினைவுமலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எசன் மறைமாவட்டத்தின் வெளிநாட்டவர்களுக்குரிய தாய்மொழிகளின் ஆன்மீக பணியக பொறுப்பாளர் திருமதி கத்தசினா பச்சின்ஸ்கா வேர்னர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin