தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் ஆசிரியர்களும் மாதகல் லூர்து அன்னை கெபி, ஜம்புகோளப்பட்டினம், கசூரினா கடற்கரை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

இச்சுற்றுலாவில் 40 மாணவர்களும் 6 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் இளையோரை வலுப்படுத்தும் முகமாக சுண்டிக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை பாலதாஸ் பிறாயன் அவர்கள் வளவாளராக கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வில் 18 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin