சிறுவர்கள் இலகுவான முறையில் இறைவார்த்தையை புரிந்து கொள்ளும் நோக்கில் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறாருக்கான இறைவார்த்தை பகிர்வு சிறப்பு நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களுக்கான குறும்படங்கள், விளக்க உரைகள் என்பவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாலர் வகுப்பு முதல் 03ஆம் தரத்தை சேர்ந்த 25 வரையான சிறார்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin