இந்தியா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் வழிகாட்டலில் மறைக்கல்வி ஆணையகத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் மறைக்கல்வி பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சிறப்பு பயிற்சிப்பட்டறை கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இந்நியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பெனாலியம் என்னும் இடத்தில் நடைபெற்றது.

மறைக்கல்வியின் பல்வேறு தளங்களிலான போதனா முறைகளையும் அவற்றின் தன்மைகளையும் மறைக்கல்வி பணியின் நிர்வாக முறைமைகளையும் உள்ளடக்கி கோவா மாநிலத்தின் பிரசித்திபெற்ற இடங்களை தரிசிக்கும் கள அனுபவ பயணத்தையும் கொண்டமைந்த இப்பயிற்சி பட்டறையில் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 34 வரையான மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குநர்கள் கலந்துகொண்டதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.

 

By admin