சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 3ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஆன்மீக குரு அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin