சர்வஜன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான தாயக மக்கள் கட்சி உறுப்பினர் திலித் ஜயவீர அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பிவிதுறு ஹெல உறுமய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய ஹம்பன்பில, தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் கூட்டணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

எமது நாட்டில் வாழும் மக்கள் தனித்தனி இனமாக ஒன்றுபடுவதைவிட எல்லா மத இன மொழி பேசும் மக்களும் ஒன்றுபட்டு வாழும்போதுதான் மகிழ்ச்சியான ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்பதனையும் ஒன்றாய் எழுந்திடும் தேசம் மகிழ்ச்சி மிகு தேசம் என்பதையும் கொள்கையாக கொண்டு இக்கட்சி உருவாக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin