குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளியில் சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்கள் விற்றல் வாங்கல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பங்குமக்களென பலரும் கலந்து சிறார்களை உற்சாகப்படுத்தினர்.

By admin