பண்டத்தரிப்பு பங்கின் துணை ஆலயமான சண்டிலிப்பாய் புனித சின்ன தெரேசா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை குயின்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin